குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS) நேற்றைய (ஜூலை 22) தினம் அல்ஷாயா குழுமத்திலிருந்து 115,000க்கும் மேற்பட்ட புதிய ஆடை பொருட்களை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் $2M என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடைகள் KRCS-ல் பதிவுசெய்யப்பட்ட கஷ்டப்படும் 5000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடை குறித்து அல்ஷயா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் முகமது அல்ஷயா கூறுகையில், “குவைத்தில் உள்ள சமூகங்களை ஆதரிப்பதில் அல்ஷயா குழுமம் ஆர்வமாக உள்ளது என்றும், மேலும் குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு நாங்கள் அளித்த நன்கொடை மற்றும் அவர்களின் ஆதரவின் மூலம் பல குடும்பங்கள் பயனடையலாம் என்று தெரிவித்தார்.
“குவைத்தில் உள்ள எங்கள் கடைகள் மற்றும் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த சக ஊழியர்கள், KRCS விநியோக நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் குடும்பங்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப சரியான ஆடைகளைப் பெறுவதை உறுதிசெய்ய உதவிகளையும் ஆதரவையும் வழங்க எதிர்பார்க்கின்றனர்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms