குவைத்தில் உள்ள ஆண்டலஸின் நகரில் வசித்து வந்த சிரியாவை சேர்ந்த தம்பதியின் 34 வயதுடைய மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கயிற்றால் கழுத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த காவல்துறை மற்றும் மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் ஆனால் அந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
மேலும் அந்த இளைஞன் ஒரு குறிப்பை எழுதி விட்டுச் தூக்கிட்டதாக கூறப்படுகிறது. அதில் “என்னை குவைத்தில் அடக்கம் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுருந்தது. இளைஞனின் சடலத்தை காவல்துறையினர் தடயவியல் துறை அனுப்பிவைத்தனர்.
Source : Arab Times