குவைத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவரப்படி, 426,871 வெளிநாட்டவர்கள் குவைத்துக்கு வெளியே சிக்கித் தவிப்பதாக, குடியிருப்பு விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் உதவி துணை செயலாளர், மேஜர் ஜெனரல் அன்வர் அல்-பர்ஜாஸ் தெரிவித்தார்.
அல்-அன்பா அரபு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், காலாவதியான குடியிருப்பை வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.
குடியிருப்பு சட்டத்தில் திருத்தம் தற்போது நடைபெற்று வருவதாகவும், ஒப்புதலுக்கான தயாரிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!
மக்கள்தொகை சரிசெய்தல் குழு அவர்களின் முன்மொழிவுகளின் ஒப்புதலுக்கான பரிசீலனைக்கு தகுதிவாய்ந்த அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் முன் இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அறிவிப்பு வரும் வரை அனைத்து நாட்டை சேர்ந்தவர்களுக்கும் அனைத்து வகையான புதிய நுழைவு விசாக்களை வழங்குவது நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய விசா சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நாட்டை விட்டு வெளியேறாத குடியிருப்பு மீறல் செய்பவர்கள் தண்டிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் குவைத்துக்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மேஜர் ஜெனரல் கூறினார்.
மேலும், இதற்காக வணிக விமான நடவடிக்கை இயல்பானவுடன் உடனடியாக ஒரு பாதுகாப்பு குழு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.