கொரோனா வைரஸ் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டில் இருப்பதற்கான குடியிருப்பு அனுமதிப்பத்திரங்களை இழந்த குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை சுமார் 127,000 பேராக அதிகரித்துள்ளது என்று குவைத் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இது வெளிநாட்டினரின் இகாமாட்களை புதுப்பிப்பதற்கான குறைபாடு அல்லது சில ஸ்பான்சர்கள் அல்லது அரசாங்க அமைப்புகளின் வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்ததன் விளைவாகும் என்று ஒரு பாதுகாப்பு வட்டாரம் அல் ராய் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தங்களின் குடியிருப்பு அனுமதிப்பத்திரங்களை ஆன்லைனில் புதுப்பித்து அவர்களுக்கு வசதிகளை வழங்குமாறு உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது.
இருப்பினும், அவர்களில் பலர் மனிதாபிமான அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகளை பயன்படுத்தவில்லை என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!
மேலும், சுமார் 500,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்லாத குவைத் குடியிருப்பு அனுமதிகளுடன் நாட்டிற்கு வெளியே உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் உள்துறை அமைச்சர் சமீபத்தில் செப்டம்பர் 1 முதல் குவைத்துக்குள் இன்னும் மூன்று மாதங்களுக்கு வெளிநாட்டவர்களின் விசாக்களை நீட்டிப்பு செய்து அறிவித்திருந்தார்.
இருப்பினும், அல் ராய் மேற்கோள் காட்டிய ஆதாரம் படி, குடியிருப்பு அனுமதி காலாவதியாகிவிட்டவர்களுக்கு அமைச்சரவை ஆணை பொருந்தாது என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!
செப்டம்பர் 1 ஆம் தேதி, இந்த ஆணை ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 31 வரையிலான காலப்பகுதியில் குடியிருப்பு அல்லது
வருகை அனுமதி முடிந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை சுட்டிக்காட்டி, கடந்த மாதம், குவைத் 32 நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் நுழைவை நிறுத்தியது, குவைத்தின் 4.8 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.4 மில்லியன் வெளிநாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.